மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 23ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராகுல் காந்தி வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவில், 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி நேதாஜி இறந்ததாக குறிப்பிட்டது சர்ச்சையானது.