தனது வறட்டு கௌரவத்திற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் சொல்வதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அண்ணாமலையின் முந்தைய குற்றச்சாட்டுக்கு, நிலுவை தொகை எதுவும் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது கடந்த 19-ந் தேதியன்று BSNL நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான 1.5 கோடி ரூபாயை உடனடியாக செலுத்துமாறு தொழிற்கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய கடிதத்தை வெளியிட்ட அண்ணாமலை, அப்படியானால் தொழிற் கல்வி இணை இயக்குநர் பொய் சொல்கிறார் என்று அர்த்தமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.