Also Watch
Read this
ஈரானுடனான ராஜதந்திர முயற்சிகள் வேகம் பெற்று, ஹார்முஸ் நீரிணை உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
* லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்த தடை
* தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு தடை
* அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
லெபனான் மீது மேலும் தாக்குதல்களை நடத்துவதற்கு இஸ்ரேலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளிக்காத இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானில் நிலைத்திருக்கும் என்றார்.
* லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே 10 நாள் போர்நிறுத்தம்
* ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக திறப்பு-ஈரான்
* போர்நிறுத்தம் அமலில் இருக்கும் காலம் வரை மட்டுமே அனுமதி
* ஈரானின் வெளியுறவு அமைச்சர் திட்டவட்டம்
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்லலாம் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், இருதரப்புக்கும் இடையில் போர்நிறுத்தம் அமலில் இருக்கும் காலம் வரை மட்டுமே இந்த அனுமதி தொடரும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved