தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக முதல் தகவல் அறிக்கையை லாக் செய்வதற்குள் யாரோ பதிவிறக்கம் செய்து வெளியிட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை என தெரிவித்தார்.