குடியரசு தினத்தை ஒட்டி, ஜம்மு காஷ்மீரில் காவல்துறையினரின் இருசக்கர வாகன சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள மைதானம் ஒன்றில் காவல்துறையினர் சாகச ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். இருசக்கர வாகனங்களில் பயணித்துக்கொண்டிருந்த போதே மேளம் அடித்தும், கம்பியின் மீது ஏறியும் சாகசம் செய்தனர். மேலும் இருசக்கர வாகனங்களில் வந்து மூவர்ணக்கொடியை ஏந்தி அசத்தினர்.