நடிகர் சூர்யா தனது 44-வது படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டதாக எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் நிலையில், அதற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், கார்த்திக் சுப்புராஜ் உடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா, தன் வாழ்நாள் முழுவதுக்குமான ஒரு சகோதரனை பெற்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.