ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 பயணிகள் பலியாகினர். ஹசாரிபாக்கிலிருந்து பொகாரோ மாவட்டத்தில் உள்ள புஸ்ரோ நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, நர்கி மோர் அருகே வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.