உக்ரைன் மீது கடந்த வாரத்தில் மட்டும் 600 ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி புகார் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரஷ்யா, அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்களை தொடர்ந்து பெற்று வருவது உறுதியானதாக கூறிய ஜெலன்ஸ்கி, ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அதிகப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.