பஞ்சாப் மாநிலம் மொகாலியில் அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்த இடத்தில் 23 மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணிகள் நிறைவடைந்தன. சனிக்கிழமை மாலை நேரத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது பெண் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியின் போது 30 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டது.