இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த 35 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டனர்.அவர்களுக்கு தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.