அணு ஆயுத அச்சுறுத்தல்களில் இருந்து உலகை காக்க வேண்டும் என செயல்படும் ஜப்பானிய அமைப்பான Nihon Hidankyo வுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவால் அணுகுண்டு போடப்பட்ட ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் உயிர் தப்பியவர்களுக்காக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.அணு ஆயுதம் இல்லா உலகை உருவாக்குவதற்கான இந்த அமைப்பின் முயற்சி, அணு ஆயுதங்களால் ஏற்படும் பயங்கர அழிவுகளுக்கு சாட்சியாக நிற்பது ஆகியவற்றுக்காக இந்த அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு குழு அறிவித்துள்ளது.