அமெரிக்காவின் தெற்கு ஓக்லஹோமா மற்றும் வடக்கு டெக்சாஸில் கொட்டித் தீர்த்த மழையால் நார்மனில் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 15 சென்டிமீட்டர் அளவிற்கு கொட்டித் தீர்த்த கனமழையால் ஓக்லஹோமா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் உள்ள சாலைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் 27 ம் தேதியும் கடுமையான மழை பெய்யும் என்றும் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.