மேற்குவங்கத்தை கைப்பற்றுவோம் என வங்கதேசத்தை சேர்ந்த சிலர் கூறியது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதுவரை தாங்கள் என்ன லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டிருப்போமா என முதலமைச்சர் மமதா பேனர்ஜி பதிலளித்தார். மேலும், இந்தியாவில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே ரத்தம் கொண்டவர்கள் என்றும் அவர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.