இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலுக்கான பதற்றத்தை தணிக்க சவூதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் மீது இந்தியா சுமத்தும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் இந்த சம்பவத்தில் வெளிப்படையான, சாா்பற்ற சா்வதேச விசாரணை நடத்துவதே சரியானது என்றும் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். கடந்த 15 மாதங்களில் சவூதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் உதவியோடு பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்டுள்ளதாக தெரிவித்த ஷாபாஸ் ஷெரீஃப், தற்போது பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு பொருளாதார வளா்ச்சியை சீா்குலைக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளாது என்றார்.