தலைநகர் டெல்லியில் வானிலை திடீரென மோசமானதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சுமார் 500-க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் ஏற்பட்டது. இதனால், டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.