எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கு தூக்கம் பறிபோயிருக்கும் என விமர்சித்த பிரதமருக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இனி தூக்கம் இல்லாமல் இரவுகளை கழிக்க போவது பிரதமர் மோடி தான் என சாடியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மகளிர் இடஒதுக்கீடு மசோதா போல சாதிவாரிக் கணக்கெடுப்பையும் கிடப்பில் போட அனுமதிக்கப் போவதில்லை என்றார்.