சட்லஜ்-யமுனை இணைப்பு கால்வாய் வழியாக நீரை பங்கிட்டுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சனையில், மத்திய அரசுடன் இணைந்து தீர்வு காணுமாறு பஞ்சாப் மற்றும் அரியானா அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராவி மற்றும் பீஸ் நதிகளின் நீரை பங்கிட ஏதுவாக இணைப்புக் கால்வாய் கட்ட திட்டமிடப்பட்டது. இதில் அரியானா பகுதி கட்டுமானம் நிறைவடைந்துள்ள நிலையில், பஞ்சாப் பகுதியில் கட்டுமானம் நிறைவடையாததால் பிரச்னை நீடிக்கிறது