உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் கெம்ப்டி அருவியில் அச்சுறுத்தும் வகையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழையால் முசோரியில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்ட நிலையில், முக்கிய சுற்றுலா தளமான கெம்ப்டி அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுப்புறங்களை சேதமடையச் செய்தது. சுற்றுலா பயணிகளுக்கு முன்கூட்டியே தடைவிதிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், அதிகளவு தண்ணீர் வெளியேறியதால் சில கடைகள் தண்ணீருக்குள் மூழ்கின.