அமெரிக்காவில் பங்குசந்தை மோசடி மற்றும் சூரியமின்திட்டத்திற்கு அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் அதானி, தம் மீதான வழக்கை வாபஸ் பெறும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நியூ யார்க் நீதிமன்றத்தில் அதானி மற்றும் இயக்குநர்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதானி குழும நிர்வாகிகள் ஏற்கனவே டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் இது குறித்து பேசி விட்டதாக தெரிகிறது. இந்த செய்தியை வெளியிட்டுள்ள புளூம்பெர்க், டிரம்ப் ஒப்புதல் அளித்தால் இன்னும் ஒரு மாத த்தில் அதானி மீதான குற்றவழக்கு ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதிபர் டிரம்பின் கொள்கை மற்றும் முன்னுரிமைகளுக்கு இந்த வழக்கு எதிரானது என கூறி, வழக்கை வாபஸ் பெறும் முயற்சியில் அதானி ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.