Also Watch
Read this
By: Web Team

நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை, அக்டோபர் மாதம் முதல் தொடங்க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பீகார் மாநிலத்தில் நடத்தியது போன்ற SIR நடவடிக்கையை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.