தண்டவாளத்தில் கால்நடைகள் ஓடுவதைத் தடுக்க, இந்திய ரயில்வே நாடு முழுவதும் தண்டவாளத்தை ஒட்டி வேலி அமைத்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வந்தே பாரத் ரயில்களின் பாதுகாப்பு குறித்து வதந்தி பரவி வரும் நிலையில் தென்னக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில், இதுவரை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான பாதைகளை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.