ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசமைப்பு சட்டப்பிரிவு 370, அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது என இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கருத்து தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஒரு நாட்டுக்கு ஒரு அரசியல் சாசனம் இருப்பதே பொருத்தமாக இருக்கும் என்றும், நாம் நமது நாட்டை ஒற்றுமையாக இருக்க செய்ய விரும்பினால், ஒரேயொரு அரசமைப்பு சாசனம் மட்டுமே நமக்கு தேவை என அம்பேத்கர் சொன்னதாகவும் கூறினார். அண்டை நாடுகளில் நிலவும் சூழலை ஒப்பிட்டுப் பார்த்தால், நம் நாட்டில் சவால்கள் பல வந்தபோதெல்லாம் இந்தியா ஒற்றுமையாகவே விளங்கியதாகவும், அதற்கு உறுதுணையாக அரசியல் சாசனம் இருந்தது குறிப்பிடத்தக்கது என்றும் பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா..