ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தமது கண்டனத்தை தெரிவித்தார். இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு புதின் தமது முழு ஆதரவை தெரிவித்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.