பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடியை பாதுகாப்பு அமைச்சக செயலாளர் ராஜேஷ் குமார் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது நாட்டின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எப்படி இருக்கிறது என மோடியிடம் பாதுகாப்பு அமைச்சக செயலர் எடுத்துக் கூறியதாக தெரிகிறது.