குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் 19ம் தேதி கேரளா மாநிலம் சபரிமலையில் தரிசனம் மேற்கொள்ள உள்ளார். இரண்டு நாள் பயணமாக வரும் 18ம் தேதி கேரளா செல்லும் அவர், கோட்டயத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். மறுநாள் காலை ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் சென்று, சபரிமலையில் தரிசனம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.