மத்திய பிரதேச மாநிலம் போபாலில், பொது இடத்தில் மது அருந்த வேண்டாம் என்று கூறிய ரயில்வே போலீஸ் அதிகாரியை சிலர் சரமாரியாக தாக்கி, அவருடைய சீருடையை கிழித்த வீடியோ வெளியாகியுள்ளது. தொடர்ந்து ரயில்வே நிலையத்தில் இருந்து புறகாவல் நிலையத்தில் காவலர் அளித்த புகாரின் பேரில் ஒருவரை கைது செய்த போலீசார் மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.