இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் மோதி, மீன்பிடி படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மீனவர்கள் 2 பேர் மாயமாகியுள்ளனர். கோவா கடற்கரை அருகே 13 பேர் கொண்ட மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் மீனவர்களின் படகு மீது அவ்வழியாக வந்த கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மோதியுள்ளது. இதில் மீனவர்களின் படகு கவிழ்ந்து அனைவரும் கடலில் மூழ்கியதை தொடர்ந்து இந்திய கடற்படையினர் தீவிர தேடுதலில் இறங்கினர். இதில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் இருவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.