கர்நாடக மாநிலம் உடுப்பியில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ. என்ற போதைப் பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நைஜீரியாவை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். பெங்களூரில் வசித்து வந்த பீட்டர் இகெடி பெலன்வோ, கர்நாடகா முழுவதும் போதை பொருட்களை சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.