இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதை தடுக்க இந்திய அரசு நவீன ஜாமர்களை நிலைநிறுத்தி உள்ளது. பஹல்காம் தாக்குதலையடுத்து இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க மத்திய அரசு மே 23ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் பயன்படுத்தும் உலகளாவிய செயற்கைக்கோள் சிக்னலை சீர்குலைக்கும் வகையில் இந்திய அரசு நவீன ஜாமர்களை பயன்படுத்துகிறது. மோதல் மற்றும் இலக்கினை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலை தடுக்கும் வகையில் இந்திய ஜாமர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.