ஜம்மு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு செல்லும் செனாப் நதி நீரை இந்தியா அடைத்து விட்டதால், செனாப் நதி வற்றி காணப்படுகிறது. இதை அடுத்து முதன்முறையாக நதிப்படுகைகளில் வசிக்கும் மக்கள் இந்த நதியை நடந்து சென்று கடந்தனர்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.