டெல்லியில் வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் வரிசெலுத்துவோர் சேவைகள் இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக இருப்பவர் அமித்குமார் சிங்கால். இவர் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். இதையடுத்து டெல்லியில் உள்ள வீடு மற்றும் அவர் பணிபுரிந்த மும்பை, பஞ்சாப் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத கோடிக்கணக்கிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.