பாகிஸ்தானுக்கு எதிராக போர் நடைபெறும் பட்சத்தில் தாமும் பங்கேற்க தயார் என கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்கொலைப் படையாக மாறி, பாகிஸ்தானுக்குச் சென்று தாக்குதல் நடத்தவும் தயார் என உணர்ச்சி மிகுதியில் கூறினார்.