வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 நாட்களில் 25 பேர் உயிரிழந்தனர். அசாம், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, வீடுகள் தரைமட்டமாகின. குறிப்பாக அசாமில் 17 மாவட்டங்கள் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்ததாகவும் 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும், மிசோரம், திரிபுரா, மேகாலயாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.