பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி ஆகியோரின் எக்ஸ் சமூக வலைதள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. நம் நாட்டுக்கு எதிராகவும், ராணுவத்துக்கு எதிராகவும் வெறுப்பை துாண்டும் வகையில் பொய் தகவல்களை பரப்புவதை தடுக்க இவர்களது சமூக வலைதள கணக்குகள் முடக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.