சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்தியாவின் சுபான்ஷு சுக்லா மற்றும் மூன்று விண்வெளி வீரர்கள் செல்லும் Axiom-4 திட்டம் வரும் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் 19 ஆம் தேதி இவர்கள் நாசாவின் கென்னடி ஏவுதளத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட திட்டமிடப்பட்டது., ஆனால் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷ்ய பிரிவில் சமீபத்தில் பழுது பார்க்கப்பட்டதை தொடர்ந்து பயணம் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக அறிக்கை ஒன்றில் Axiom Space நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பயணத்தில் இந்தியாவின் விமானப்படை அதிகாரி சுபான்ஷு சுக்லாவுடன் ஹங்கேரி மற்றும் போலந்து நாட்டு வீர ர்களும் செல்கின்றனர்.இதையும் படியுங்கள் : வீணாக கை வைக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு விஜய் எச்சரிக்கை.