ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. கடந்த மே 3ஆம் தேதி மத்தியபிரதேசத்தின் பெதுல் பகுதியில் 2.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.