நாடு முழுவதும் 27 விமான நிலையங்கள் மூடப்பட்டதை அடுத்து 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளை குறிவைத்து இந்திய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் இலக்குகள் அழிக்கப்பட்டன. இதன் காரணமாக எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு 27 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட உத்தரவிட்டது. அதன்படி மே 10-ந் தேதி காலை வரை விமான நிலையங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் வான்வெளி பரப்பை பயன்படுத்தும் வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.