நடப்பு ஆண்டு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவ படிப்பிற்கு செல்வதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மருத்துவ கட்டமைப்பு குறித்த ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறினார்.