சென்னை நுங்கம்பாக்கத்தில், அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி செயல்பட்டதாக தனியார் மதுபான விடுதி மீது புகார் எழுந்துள்ளது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தத்துடன் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியதாக, Lord of the drinks Bar என்ற மதுபான விடுதியின் உரிமையாளர் ராஜ் பிரதீப், மேலாளர் வெங்கட்குமார், உதவி மேலாளர் ஸ்ரீதர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.