Also Watch
Read this
Posted on: Sep 01, 2024 11:05 AM
By: Srini Vasan

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 65% இடஒதுக்கீட்டை அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கக் கோரி பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தி கடந்த 2023ம் ஆண்டு பீகார் சட்டமன்றத்தில் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த திருத்தங்கள் அரசியலமைப்பின் வரம்புகளை மீறுவதாக உள்ளதாக கூறி, பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் நாடு தழுவிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் மற்றும் பீகாரில் 65% இடஒதுக்கீட்டை அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கக் வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ஜேடி மாநிலம் தழுவிய ஒரு நாள் போராட்டத்தை நடத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved