மத்திய அரசு நிதி வழங்காததால், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது வரை நடைபெறவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.