வீடு புகுந்து தாய், மகள் இருவரையும் தாக்கி பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாகை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. காரைக்காலை சேர்ந்த முத்து என்பவன் கடந்த 2024 ஆம் ஆண்டு நாகை தெற்கு பொய்கைநல்லூரில், இரவு நேரத்தில் வீட்டில் புகுந்து தாய் மற்றும் மகள் இருவருக்கும் பாலியல் தொந்தரவு அளித்ததை அடுத்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் இரண்டு நாட்களுக்குள் போலீசார் அவனை கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, குற்றவாளி முத்துவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 32 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு 7 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.