மதிமுக ஆண்டு விழாவை புறக்கணித்தார் என்ற தகவலுக்கு துரைவைகோ மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மதிமுக கட்சியின் 32வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்கவில்லை என விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உடல் நலக்குறைவு மற்றும் வெளியூரில் இருந்து தாமதமாக வந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.