நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே வீட்டின் காம்பவுண்டுக்குள் நுழைந்த காட்டு யானை, பலா மரத்தில் இருந்த பழங்களை லாவகமாக பறித்துக் கொண்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. அத்திக்குன்னா பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் பலாப்பழம் பழுத்திருப்பதை கண்ட காட்டு யானை ஒன்று, நைசாக காம்பவுண்டுக்குள் நுழைந்தது. பிறகு, மரத்தின் மீது காலை தூக்கி வைத்து, மேல் பகுதியில் தொங்கிய 2 பழங்களையும் தும்பிக்கையால் லாவகமாகப் பறித்தது. அதில் ஒரு பழத்தை சாப்பிட்டு விட்டு மற்றொரு பழத்தை தும்பிக்கையில் வைத்தபடி, கிளம்பிய காட்டு யானை, காம்பவுண்டு இரும்பு கேட்டை அசால்டாக தந்தத்தால் தூக்கி கடாசி விட்டு வெளியே சென்றது.