கோயிலில் உள்ள அர்த்த மண்டபத்திற்குள் சிவாச்சாரியார்கள் ,பட்டாச்சாரியார்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதியில்லை என தர்மபுர ஆதீனம் தெரிவித்தார். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நடைபெற்ற விவகாரம் தொடர்பாக முழுமையாக தகவல் தெரியும் வரை இசைஞானி இளையராஜா உள்ளிட்ட யார் மீதும் குற்றம் சொல்லமுடியாது என்றார்.