Also Watch
Read this
By: Admin News Tamil

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மான், வரையாடு, சிறுத்தை, செந்நாய், யானை, காட்டு மாடு, கரடி போன்ற வன விலங்குகள் அதிக அளவில் உள்ளது. இவற்றை காண்பதற்காகவும், வால்பாறை செல்வதற்காகவும், தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடி வழியாகச் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அழியார் வனத்துறை சோதனைச் சாவடி அருகே மூன்று குட்டிகளுக்கு பால் கொடுத்துகொண்டு தாய் குரங்குகள் அரவணைத்தவாறு அமர்ந்திருந்து. இதனைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.