ஒரு பெண்ணுக்காக சாட்டையால் தம்மைத்தாமே அடித்துக்கொள்ளும் அண்ணாமலை, மணிப்பூரில் பல பெண்கள் பாதிக்கப்பட்ட போது என்ன செய்து கொண்டிருந்தார் என திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில், பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தை சேர்ந்த வெறும் 20 எம்.பி.க்களை பார்த்து 300 எம்.பிக்கள் பயப்படுவதாக கூறினார்.