சேலத்தில் நெசவுத் தொழில் செய்து வந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தானாகரடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், தமது தாயாரிடம் 50 ஆயிரம் ரூபாய் கேட்டிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விபரீத முடிவுக்கு காரணம் தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவிக்கும் நிலையில், சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.