நெல்லை நீதிமன்றத்திற்க வெளியில் நடந்த கொலை சம்பவத்திற்கு தாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்றும், தன் அருகில் ஒருவரை வெட்டினால் கூட தன்னால் தடுக்க முடியாது நடவடிக்கை தான் எடுக்க முடியும் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நெல்லை நீதிமன்றத்தின் வெளியே நடந்த கொலை சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு கொலையாளிகளை கைது செய்த காவல்துறையினரை பாராட்டவேண்டும் என கூறினார்.பல்கலைக்கழக தேர்வு குழுவில் அரசு சட்டப்படி நடப்பதாகவும்,மூன்று பேர் தான் அந்த தேர்வு குழுவில் இருக்க வேண்டும் என்றும் ஆனால் நான்காவது நபரை நியமிக்க வேண்டுமென ஆளுநர் கூறுகிறார், அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.