சேலம் மாவட்டம் மேட்டூரில் திறக்கப்பட்ட நீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணைக்கு வந்தடைந்த நிலையில் விவசாயிகள் மேள தாளங்கள் முழங்க படையலிட்டு பூக்கள், நெல்மணிகளை தூவி வரவேற்றனர். டெல்டா குறுவை சாகுபடிக்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இந்நீரானது முக்கொம்பு அணையை வந்தடைந்த நிலையில், காவிரி, கொள்ளிடம் என பிரித்து அனுப்பப்படுகிறது.